சாஸ்தாவான சுவாமி ஐயப்பனுக்கு எந்த அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (09:03 IST)
சபரிமலையில் குடிகொண்டுள்ள சாஸ்தாவான சுவாமி ஐயப்பனுக்கு பல்வேறு பொருட்களை கொண்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பொருளின் அபிஷேகம் மீதும் ஒவ்வொரு அருளினை வழங்குகிறார் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.



பொதுவாக சுவாமி ஐயப்பனுக்கு நெய், பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் மற்றும் பழச்சாறுகள் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கான அபிஷேக பொருட்களை பக்தர்கள் வாங்கி அளிக்கலாம். நெய் அபிஷேகம் நோய் அற்ற வாழ்வை அருளுகிறது. தயிர் அபிஷேகம் கட்டான உடலையும் ஆரோக்கியத்தையும் தருகிறது.

பசும்பாலில் செய்யப்படும் அபிஷேகமானது வீட்டில் செல்வ வளத்தை பெருக்குகிறது. இளநீர் அபிஷேகம் தானிய லாபம் அளிக்கும். பஞ்சாமிர்த அபிஷேகம் ஆயுள் விருத்திக்கு அருளும். விபூதி அபிஷேகம் ஐஸ்வர்யத்தையும், புஷ்ப அபிஷேகம் உயர் பதவிகளையும் அருளுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

ஞானம், கல்வி அருளும் கும்பேஸ்வரர்: கும்பகோணம் ஆலயச் சிறப்புகள்!

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில்: நாய் வாகனமில்லா யோக பைரவர் தரிசனம்

மலைபோன்ற சிக்கல்களை தீர்க்கும் கரியமாணிக்கப் பெருமாள் திருத்தலம்!

திருப்பதி வைகுண்ட துவார தரிசனம்: 10 நாள் வழிகாட்டுதல்கள் வெளியீடு – சலுகைகள் ரத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments