Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடற்கரையில் ஒதுங்கிய 104 மனித உடல்கள்

கடற்கரையில் ஒதுங்கிய 104 மனித உடல்கள்
, வெள்ளி, 3 ஜூன் 2016 (18:52 IST)
லிபிய நாட்டு கடற்கரையில் 104 மனித உடல்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு சென்ற அகதிகள் என கூறப்படுகிறது.


 
 
ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 700 பயணிகளுடன் சென்ற ஒரு அகதிகள் படகு எதிர்பாராத விதமாக க்ரேட் தீவு அருகே கவிழ்ந்ததில் பலர் உயிரிழந்தனர். இதில் 104 உடல் லிபிய கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
படகில் சென்ற 700 அகதிகள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் இருந்த நிலையில், 104 அகதிகளின் உடல் லிபிய கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக அந்நாட்டு கடற்படை அதிகாரி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனது மகனின் கதி என்ன? - புலம்பும் மதனின் தாயார்