தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் 2 மணி நேரத்திற்குள்ளாக தமிழகம் முழுவதும் 13.80% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
இதனைத்தொடர்ந்து வெளியான தகவலின் படி தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% வாக்குப்பதிவு ஆகியுள்ளது. அதிக பட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.79% வாக்குபதிவு ஆகியுள்ளது.