சாந்த் சா ரோஷன் செஹரா என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் தமன்னா . அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.
சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹிட்டானது. காதலர் விஜய் வர்மாவுடன் வசித்து வரும் தமன்னா பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இப்போது இந்தி படங்களில் அதிகமாகக் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபகாலமாக கவர்ச்சி தூக்கலானப் பாத்திரங்களில் தொடங்கியுள்ள அவர் இதுபற்றி பேசும்போது “நான் என் சினிமா பயணத்தின் தொடக்கத்தில் விதித்துக் கொண்ட சில கட்டுப்பாடுகளால் சில அழுத்தமானக் கதாபாத்திரங்களையும் நல்ல படங்களையும் இழந்ததாக உணர்ந்தேன். அதனால்தான் இப்போது எனக்கு நானே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டு கவர்ச்சியாக நடிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.