துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் ‘கூலி’ படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்…வலுக்கும் கண்டனம்!

vinoth
வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (07:57 IST)
சென்னை மாநகராட்சியின் கீழ் பணியாற்றி வந்த துப்புரவுத் தொழிலாளர்கள் தங்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதியக் குறைப்புக்கு எதிராக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாநகராட்சி அலுவலகத்தின் வாசலில் போராடி வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்கவில்லை. மேலும் அது சம்மந்தமாகப் பேசிய அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டவர்கள் மிகவும் ஆணவத்துடன் பேசி விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன.

இது சம்மந்தமாக ஆளும் கட்சி தொழிலாளர்களின் கோரிக்கையை செவிமடுத்துக் கேட்கவேண்டுமென அதன் கூட்டணிக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ தொழிலாளர்களை சந்தித்துப் பேசவேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று வெளியாகும் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தை நேற்று சிறப்புக் காட்சியில் பார்த்துப் படக்குழுவைப் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் வெளியாக, இணையத்தில் விமர்சனங்களும் கண்டனங்களும் முதல்வர் மேல் எழுந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments