Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசன் படத்தில் வட சென்னை செந்திலாக இடம்பெற விரும்புகிறேன் –நடிகர் கிஷோர் வேண்டுகோள்!

Advertiesment
சிம்பு

vinoth

, திங்கள், 10 நவம்பர் 2025 (12:45 IST)
சிம்பு மற்றும் வெற்றிமாறன் இணைந்து உருவாக்கவுள்ள ‘அரசன்’படத்தின் முன்னோட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாவதற்கு முதல் நாளே திரையரங்குகளிலும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, வேல் ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இந்த முன்னோட்டக் காட்சியிலேயே வட சென்னை உலகத்தில் சொல்லப்படாத ஒரு கதை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இயக்குனர் வெற்றிமாறனும் சில நேர்காணல்களில் வடசென்னை படத்தின் உலகத்தில் நடக்கும் மற்றொரு கதை எனத் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் இந்த படத்தில் இடம்பெறப் போகும் சர்ப்ரைஸ் காட்சிகளுக்காக ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

அதனால் வடசென்னை படத்தில் இடம்பெற்ற எந்தந்த கதாபாத்திரங்கள் அரசன் படத்தில் இடம்பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் வடசென்னை படத்தில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்த கிஷோர் இதுபற்றிப் பேசியுள்ளார். அதில் “அரசன் படத்தில் செந்திலாக இடம்பெற விரும்புகிறேன். அதற்காக வெற்றிமாறன் அழைப்பார் எனக் காத்திருக்கிறேன். வட சென்னை படத்தில் நான் பார்த்து வியந்த பல காட்சிகள் இல்லை. அதையெல்லாம் வெற்றிமாறன் ரிலீஸ் செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளி பிளாக்பஸ்டர் ‘டியூட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!