Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விக்ரம்மின் மகன் என்பதால் கெத்து இல்லை… துருவ் விக்ரம் ஒபன் டாக்!

Advertiesment
மாரி செல்வராஜ்

vinoth

, புதன், 15 அக்டோபர் 2025 (08:11 IST)
நடிகர் விக்ரம்மின் மகனான துருவ் விக்ரம் ‘அர்ஜுன் ரெட்டி’யின் ரீமேக் படமான ஆதித்யா வர்மா படம் மூலமாக் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘மகான்’ திரைப்படத்தில் நடித்தார். அதையடுத்து மூன்றாவது படமாக மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார். ஆனால் ‘பைசன்’ படம்தான் தன்னுடைய முதல் படம் என்று துருவ் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபது, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது. படத்தில் இருந்து வெளியானப் பாடல்கள் இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் துருவ் , விக்ரம்மின் மகனாக இருப்பதால் வரும் சாதக பாதகங்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் விக்ரம்மின் மகன் என்பதால் எனக்கு கெத்து இல்லை. சீயான் என்பது அவருக்குதான் கெத்து.  ‘இவன் விக்ரம் மகன்’ என்பது என்னை வேதனையூட்டியது. ஆனால் அந்த பெயர்தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோகா ஓடிடி ஸ்ட்ரீமிங் குறித்து அப்டேட் வெளியிட்ட முன்னணி ஓடிடி நிறுவனம்!