5வது டி20 போட்டி மழையால் ரத்து.. தொடரை வென்றது இந்தியா..!

Siva
சனி, 8 நவம்பர் 2025 (16:27 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று நடைபெற இருந்த ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
இதனை அடுத்து, ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றதாகவும் அறிவிக்கப்பட்டது. 
 
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங் செய்யக் களத்தில் இறங்கியது. அபிஷேக் ஷர்மா 23 ரன்களும், சுப்மன் கில் 29 ரன்களும் எடுத்து, இந்திய அணியின் ஸ்கோர் 4.5 ஓவர்களில் 52 ரன்கள் இருந்த நிலையில், மழையால் ஆட்டம் தடைப்பட்டது. 
 
மழை தொடர்ந்து பெய்ததால், போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஜடேஜாவை தோனி தியாகம் செய்வார். ஏனென்றால்…’- முகமது கைஃப் சொல்லும் காரணம்!

சஞ்சு சாம்சன் உள்ளே… ஜடேஜா & சாம் கரண் வெளியே – 48 மணிநேரத்தில் வெளியாகும் அறிவிப்பு!

ரஜத் படிதாருக்குக் காயம்… ஐபிஎல் தொடருக்குள் குணமாகிவிடுவாரா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் புதிய கேப்டன்… பட்டியலில் இருவர்!

2026 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராவது எப்போது? கம்பீர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments