Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விற்பனைக்கு வருகிறது பெங்களூரு ஐபிஎல் அணி.. 6 நிறுவனங்கள் போட்டா போட்டி..!

Advertiesment
பெங்களூரு அணி

Mahendran

, வெள்ளி, 24 அக்டோபர் 2025 (14:18 IST)
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரில் பிரபலமான அணியான பெங்களூரு அணி, தற்போது விற்பனைக்கு வருவதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த அணியை நிர்வகித்து வரும் டியாஜியோ குழுமம் அணி மீதான தனது முழு பங்குகளையும் விற்க தயாராகி வருகிறது.
 
அணி விற்பனைக்கு வர முக்கியப் பொருளாதாரக் காரணங்கள் கூறப்படுகின்றன: அணியை நடத்துவதற்கான ஆண்டு செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளையாட்டு செயலிகளுக்கு சமீபத்தில் மத்திய அரசு விதித்த தடையால், அணியின் விளம்பர வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
பெங்களூரு அணியின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 17,859 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க அணியை வாங்குவதற்கு ஆறு பெரிய நிறுவனங்கள் போட்டியில் உள்ளன:
 
பர்த் ஜிந்தால் : டில்லி கேபிடல்ஸ் அணியின் தற்போதைய இணை உரிமையாளரான இவர், பெங்களூரு அணியை வாங்க தீவிரம் காட்டுகிறார்.
 
அதானி : இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமங்களில் ஒன்றான அதானி குழுமமும் வாங்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
 
ஆதர் பூனம்வாலா: தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.
 
புதுடில்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம்.
 
இரண்டு அமெரிக்க நிறுவனங்கள்.
 
இந்த ஆறு நிறுவனங்களில், பர்த் ஜிந்தால் மற்றும் அதானி குழுமம் இடையேதான் பெங்களூரு அணியை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவி வருவதாகத் தெரிகிறது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள்… கங்குலியை முந்திய ரோஹித் ஷர்மா!