3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Mahendran
வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (18:27 IST)
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அடங்கிய அமர்வு, மூன்றாவது குழந்தை பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது என்று தெரிவித்துள்ளது.
 
பணிக்குச் சேரும் முன்பே இரண்டு குழந்தைகளை பெற்ற ஒரு பெண், மூன்றாவது முறையாக கருவுற்று பணிக்கு சேர்ந்தபோது அவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை இந்த அமர்வு சுட்டிக்காட்டியது.
 
இந்த அடிப்படையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ரஞ்சிதாவுக்கு சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.
 
மேலும், குழந்தை பிறப்புக்கு முன்பும் பின்பும் ஒரு தாய் அனுபவிக்கும் வலிகளை கருத்தில் கொண்டே மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. எனவே, மூன்றாவது பிரசவத்திற்காக மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நீதியின் முன் நிற்காது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments