வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வு: வடகிழக்குப் பருவமழை தீவிரம்

Mahendran
வெள்ளி, 7 நவம்பர் 2025 (15:25 IST)
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வங்கக்கடல் பகுதியில் தொடர்ச்சியாக இரண்டு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமிழகத்தில் அக்டோபர் 16-ல் தொடங்கிய பருவமழையை தொடர்ந்து, ஒரு காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது; மற்றொன்று 'மோந்தா' புயலாக ஆந்திராவில் கரையைக் கடந்தது.
 
தற்போது, நவம்பர் மாதத்தில் மழை தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது: முதல் தாழ்வு நவம்பர் 14-ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிறது. இரண்டாவது தாழ்வு நவம்பர் 19-ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றுமொரு தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
 
இந்த அடுத்தடுத்த வானிலை மாற்றங்களால், வரும் நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

கோவில் பிரசாதத்தில் ரசாயனம் கலக்க தீவிரவாதிகள் திட்டம்.. அண்ணாமலை அதிர்ச்சி தகவல்..!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.2400 உயர்வு..!

பங்குச்சந்தையில் முதலீடு என ரூ.10 கோடி ஏமாந்த வழக்கறிஞர்.. நூதன மோசடி

டெல்லி குண்டுவெடிப்பை பயமுறுத்தி மோசடி.. போலீஸ் போல் நடித்து மிரட்டல்...!

அடுத்த கட்டுரையில்
Show comments