Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எஸ்ஐ தேர்வு முடிவுகள் வெளியான சில மணி நேரத்தில் திரும்ப பெற்றது ஏன்? உயர் நீதிமன்றம் கிடுக்குபிடி கேள்வி..!

Advertiesment
TNUSRB SI Result

Siva

, வியாழன், 5 பிப்ரவரி 2026 (16:22 IST)
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே நீக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. முறையாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளைத் திடீரென நீக்கியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடிவுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கலாம் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தது. 
 
இருப்பினும், அரசுப் பணியாளர் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம் என வலியுறுத்திய நீதிமன்றம், முடிவுகள் நீக்கப்பட்டதற்கான விரிவான சூழல் மற்றும் தற்போதைய நிலை குறித்துப் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 
 
ஏற்கனவே தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்திருந்த தேர்வர்களிடையே, நீதிமன்றத்தின் இந்த தலையீடு மற்றும் உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், எஸ்.ஐ தேர்வு முடிவுகள், மதுரை உயர்நீதிமன்றம், தொழில்நுட்பக் கோளாறு, தமிழக அரசு, வேலைவாய்ப்பு செய்திகள், நீதிமன்ற உத்தரவு

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 மணி நேரம் கடலில் நீந்தி பெற்றோரை காப்பாற்றிய குட்டி ஹீரோ!.. குவியும் பாராட்டு..