TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (16:56 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட 70 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது.
 
தேர்வு விவரங்கள்
காலிப்பணியிடங்கள்: 70
 
தேர்வு தேதி: ஜூன் 15
 
அனுமதிக்கப்பட்டவர்கள்: 2 லட்சத்து 49 ஆயிரத்து 294 பேர்
 
தேர்வு எழுதியவர்கள்: 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 பேர்
 
தேர்வு முடிவுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in-இல் தெரிந்துகொள்ளலாம்.
 
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு சென்னையில் டிசம்பர் 1 முதல் 4 வரை நடைபெறும். தேர்வர்கள் அதற்கான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து கட்டணம் செலுத்த வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி கேட்டுக் கொண்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments