தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான்..! – தமிழக அரசு உறுதி!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (11:46 IST)
தமிழகத்தில் கல்வி திட்டங்களில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் மும்மொழி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து இருமொழி கொள்கையே அமலில் இருக்கும் என தமிழக அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்றில் நீதிமன்றம் “கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. அதுபோல தமிழகத்தில் கூடுதலாக ஒரு மொழி சேர்ப்பதில் என்ன சிக்கல் உள்ளது?” என்று கேள்வியெழுப்பியுள்ளது.

இதற்கு திட்டவட்டமாக பதிலளித்துள்ள தமிழக அரசு, தமிழகத்தில் இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் இருமொழி கொள்கையே தொடரும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments