Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்யும்.. செப்டம்பர் 9 வரை தமிழக வானிலை நிலவரம்..!

Advertiesment
வானிலை

Mahendran

, சனி, 6 செப்டம்பர் 2025 (14:20 IST)
தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வட தமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
வட தமிழகத்தின் சில பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் நாளை லேசான மழை தொடரும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
செப்டம்பர் 8 அன்று ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.
 
செப்டம்பர் 9 என்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கோவை மலைப்பகுதிகள், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
 
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்சி பதவியில் இருந்து நீக்கியதற்கு மகிழ்ச்சி.. கட்சியை இணைக்கும் பணி தொடரும்: செங்கோட்டையன்