வகுப்பறையில் வைத்து கல்யாணம், வைரலான வீடியோ! – மாணவர்கள் செயலால் அதிர்ச்சி!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (11:33 IST)
கன்னியாக்குமரி அருகே வகுப்பறையில் வைத்து மாணவன் ஒருவன் சக மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி களியக்காவிளை அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் கடந்த 3ம் தேதி 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன் சக மாணவி ஒருவருக்கு வகுப்பறையிலேயே வைத்து தாலி கட்டியுள்ளான். இதை அங்கிருந்த மற்றொரு மாணவன் வீடியோ எடுத்து வாட்ஸப்பில் பகிர இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்த பள்ளி நிர்வாகம் சம்பந்தபட்ட மாணவன், மாணவி மற்றும் வீடியோ எடுத்த மாணவனையும் இடைநீக்கம் செய்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் மாணவர்கள் விளையாட்டாக அப்படி செய்ததாக சொல்ல அவர்களுக்கு அறிவுரை வழங்கி, இனி இதுபோல் செய்வதில்லை என எழுதி வாங்கி கொண்டு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments