விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: சீமான் கேலி

Mahendran
வியாழன், 11 செப்டம்பர் 2025 (17:48 IST)
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய் தனது பரப்புரையில் சிங்கம் என பேசியது குறித்து கருத்தை கேலியாக குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
மக்கள் மத்தியில் நிற்பவன், மக்களுக்காக போராடுபவன் தான் மக்களை சந்திப்பவன் தான் உண்மையான அரசியல் தலைவன். ரோடு ஷோ நடத்துவதும், கூட்டத்தை கூட்டிவிட்டு பேசுவதும் மக்களை சந்திப்பது ஆகாது. மக்களின் பிரச்சனைகளுக்காக மக்களோடு நிற்பதுதான் உண்மையான சந்திப்பு" என்று அவர் கூறினார்.
 
மேலும், விஜய் தன்னை "வேட்டையாட வரும் சிங்கம்" என்று குறிப்பிட்டதற்கு பதிலளித்த சீமான், "அவர் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல; வேடிக்கை காட்ட வரும் சிங்கம்" என்று விமர்சித்தார்.
 
இந்த கருத்து, அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments