Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று மாலை 22 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

Advertiesment
தமிழக மழை

Mahendran

, வெள்ளி, 17 அக்டோபர் 2025 (14:29 IST)
வடகிழக்கு பருவ மழை தொடங்கி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மாலை தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
 
அதேபோல் ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் லேசான மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது 
எனவே மேற்கண்ட 22 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!