Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

8 பேர் கொலை வழக்கில் சப்பாணி மனைவியிடம் தீவிர விசாரணை

8 பேர் கொலை வழக்கில் சப்பாணி மனைவியிடம் தீவிர விசாரணை
, வியாழன், 6 அக்டோபர் 2016 (21:19 IST)
8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி சப்பாணியின் மனைவியிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
 

 
கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரை சேர்ந்தவர் தங்கதுரை (35). மாயமானார். இதுகுறித்து திருவெறும்பூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தங்கதுரையின் நண்பரான சப்பாணி (35) கொன்று புதைத்தது தெரியவந்தது.
 
சப்பாணி கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, தங்கதுரை உள்பட 8 பேரை அவர் கொன்றதும், அதில் அவரது தந்தை தேக்கனும் ஒருவர் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. புதையல் எடுப்பதாக கூறியும், நகை - பணத்துக்காகவும் கொலை செய்தது தெரியவந்தது.
 
இந்நிலையில், கொலையான அதிமுக கவுன்சிலர் குமரேசன், சத்தியநாதன், விஜய் விக்டர், கோகிலா, சப்பாணியின் தந்தை தேக்கன் ஆகிய 5 பேரின் உடல்களை தோண்டி எடுத்தனர். அப்போது கைப்பற்றப்பட்ட முக்கிய பாகங்கள் மற்றும் எலும்புகளை மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
மேலும் இருவரது உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி வீசியதாக சப்பாணி கூறியதை அடுத்து உடல்களின் பாகங்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
எனவே சப்பாணி பற்றி மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அவரது தாய் கருப்பாயி, மனைவி மோகனப் பிரியா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’மதனை மேஜிக் செய்தா பிடிக்க முடியும்’ - போலீஸ் விளக்கத்தை ஏற்று 4 வாரம் அவகாசம்