அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம்: உத்தரவாதம் கொடுத்த ஓபிஎஸ்..!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (13:40 IST)
அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை  பயன்படுத்த மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.  

அதிமுக கொடி சின்னத்தை பயன்படுத்த கூடாது என ஓபிஎஸ் க்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. உத்தரவை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரும்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

 இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் இன்று உத்தரவாதம் அளித்துள்ளது.  

இதனை அடுத்து ஓபிஎஸ் எதிராக எடப்பாடி பழனிச்சாமி தொடந்த வழக்கு டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

ஓபிஎஸ் தரப்பு உத்தரவாதம் கொடுத்துள்ளதால் இனிமேல் அதிமுகவின் கொடி, சின்னத்தை அவர் பயன்படுத்த மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

அடுத்த கட்டுரையில்
Show comments