அமித்ஷாவை சந்திக்கிறார் டாக்டர் ராமதாஸ்.. 30 தொகுதிகள் கேட்க திட்டம் என தகவல்..!

Siva
ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (15:08 IST)
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக, கட்சி இரண்டாகப் பிரிந்துள்ளது. இரு தரப்பினரும் தங்களுக்குத்தான் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் உள்ளது என உரிமை கொண்டாடி வருகின்றனர். 
 
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளார். இந்த சந்திப்பு அடுத்த சில நாட்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும்  திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளுடனும் பாமக ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி எந்த கூட்டணியில் இணைந்தாலும், பாமகவுக்கு 30 தொகுதிகள் கேட்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
ராமதாஸின் இந்தத் திடீர் அரசியல் நகர்வுகள், தமிழக அரசியலில் பாமகவின் எதிர்கால நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments