சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தை 'இந்தியா' கூட்டணியின் தலைவர்கள் இன்று மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற கோரிய வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் அளித்த உத்தரவு சர்ச்சைக்குள்ளானது. மனுதாரரை சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற அவர் மீண்டும் உத்தரவிட்டதால், அது சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய தீர்ப்பு என்று தமிழக அரசு குற்றம் சாட்டியது.
இதன் விளைவாக, தி.மு.க., காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100 மக்களவை எம்.பி.க்கள் மற்றும் 50 மாநிலங்களவை எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மான நோட்டீஸை, கனிமொழி, டி.ஆர். பாலு, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மக்களவை தலைவரிடம் வழங்கினர்.