தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva
புதன், 15 ஜனவரி 2025 (13:16 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததை அடுத்து, கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரிய அளவில் மழை இல்லை என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மீண்டும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனவரி 18ஆம் தேதி, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மற்றும் உள் தமிழகத்தில் சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஜனவரி 19ஆம் தேதி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20, 21 ஆகிய நாட்களில் லேசான மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில், பொருத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், சில இடங்களில் மட்டுமே லேசான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..

அடுத்த கட்டுரையில்
Show comments