சென்னையில் இரண்டாவது நாளாக கனமழை: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்..!

Siva
செவ்வாய், 2 டிசம்பர் 2025 (08:22 IST)
சென்னையில் இரண்டாவது நாளாக தொடரும் கனமழை காரணமாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக மழை பெய்தது.
 
இதன் காரணமாச் சென்னையின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இருப்பினும், மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
சென்னை திருவல்லிக்கேணியில் மழையால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக ஒரு வீட்டின் மின்விசிறி தீப்பிடித்ததாகவும், இதனை அறிந்த தீயணைப்பு துறை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டில் இருந்தவர்களை பாதுகாப்பாக காப்பாற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
இந்த நிலையில், சென்னை அண்ணா சாலை, மெரினா, சாந்தோம், மயிலாப்பூர், எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சாரல் மழை பெய்து வருவதாகவும், புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments