3 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை… வானிலை எச்சரிக்கை..!

Mahendran
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (14:52 IST)
தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை காரணமாக, தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 4ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல்களும் வெளியாகி வருகின்றன. சென்னையை பொருத்தவரை, இன்று வெயில் காணப்பட்டாலும், இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
மேலும், தமிழ்நாட்டில் உள்ள மூன்று மாவட்டங்களில், அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இதனை அடுத்து, மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments