கஞ்சா போதை.. பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்த மகன்.. தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
திங்கள், 10 நவம்பர் 2025 (17:33 IST)
கஞ்சா போதையில் பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்த மகனை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னை அம்பத்தூர் அருகே நடந்துள்ளது. 
 
சென்னை, அம்பத்தூரை அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்த பன்றி இறைச்சி வியாபாரி மன்மதன். இவரது மகன் ஸ்ரீதர் ஆட்டோ ஓட்டுநர். மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான ஸ்ரீதர், அடிக்கடி வீட்டிற்கு பெண்களை அழைத்து வந்து, பெற்றோருடன் சண்டையிட்டு அவர்களை தாக்கி வந்துள்ளார்.
 
நேற்று முன்தினம் இரவு, போதையில் வந்த ஸ்ரீதர் தன் பெற்றோரை மீண்டும் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மன்மதன், ஆத்திரத்தில் இறைச்சி வெட்டும் கத்தியால் ஸ்ரீதரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
 
கொலைக்கு பிறகு, மகனின் உடலை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, தாய் கல்யாணியை மகள் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, மன்மதன் தன் வழக்கமான வேலைக்கு சென்றுள்ளார்.
 
சந்தேகத்தின் பேரில் மன்மதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கொலைக்கு உடந்தையாக இருந்த தாய் கல்யாணியையும் அம்பத்தூர் போலீசார் கைது செய்து, இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஞ்சா போதை.. பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்த மகன்.. தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!

மோடியை அடுத்து அத்வானியையும் புகழ்ந்த சசிதரூர்.. காங்கிரஸ் கட்சி அதிருப்தி..!

அபிநய் மரணம்.. கண்டுகொள்ளாத உறவினர்கள்!.. இறுதி ஏற்பாடுகளை செய்த KPY பாலா...

மகளிர் உரிமைத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்.. பெண்கள் மகிழ்ச்சி..!

ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடிய பள்ளி மாணவர்கள்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments