Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவர் பிறந்தநாளில் திமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (21:11 IST)
கோயம்பேடு அருகே திமுக இளைஞர் அணி நிர்வாகி அடிவாள் வெட்டு பட்டு பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


 

 
சென்னை கோயம்பேடு அருகே உள்ள ஆழ்வார் திருநகர் மேட்டுக்குப்பத்தில் வசித்து வரும் கமலக்கண்ணன் 148-வது வட்ட திமுக செயலாளராக உள்ளார். இவரது மகன் பிரசன்னா, இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருக்கிறார்.
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, இவர்கள் இருவரும் சேர்ந்து அப்பகுதியில் பேனர் வைத்துள்ளனர். இதற்கு வட்ட துணை செயலாளராக இருக்கும் அசோக்குமார் மற்றும் அரிகரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக் கிடையே தகராறு ஏற்பட்டது.
 
பின்னர் அது மோதலாக மாற அசோக் குமார், கமலக்கண்ணனை அரிவாளால் வெட்ட முயன்றார். இதனை தடுக்க முயன்ற பிரசன்னாவுக்கு இடது கையில் அரிவாள் வெட்டு பட்டு பலத்த காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி: பதவியேற்பு விழாவிற்கு வராத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

"3 ஆண்டுகளில் 11 பேரை கொன்ற புலி" - கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி..!!

புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு.! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.! செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு.!!

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments