திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

Mahendran
வியாழன், 6 நவம்பர் 2025 (15:25 IST)
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டத்தை திமுக நடத்தியபோது, அதில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் பங்கேற்றது தமிழக அரசியல் அரங்கில் புருவங்களை உயர்த்தியுள்ளது.
 
வரவிருக்கும் தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் அறிவிக்காத தேமுதிக, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோதிலும், அதிமுகவுடனும் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தையில் இருந்தது.
 
திமுக கூட்டிய கூட்டத்தில் தேமுதிக கலந்துகொண்டதன் நோக்கம், இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளில் தங்கள் கூட்டணி கோரிக்கைகளை இன்னும் அதிகமாக உயர்த்திகொள்ளவே என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
தேமுதிகவின் இந்த சாமர்த்தியமான நகர்வு, அதிமுக தலைமைக்கு ஒரு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. 'தேமுதிக-வை எப்படி தங்கள் பக்கம் இழுப்பது?' என்று அதிமுக தலைமை தற்போது தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தேமுதிகவின் இந்த குழப்பமான நிலை, கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கூடுதல் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments