Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 மரக்கன்று நட்டால் பி.இ சேர்கையில் 1 மதிப்பெண்

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (15:25 IST)
25 மரக்கன்றுகள் நட்டிருந்தால் பி.இ விண்ணப்பதாரர்களுக்கு, சேர்கையின் போது 1 மதிப்பெண் வழங்கப்படும் என்று மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி, மக்களுக்கு விழிபுணர்வு ஏற்படுத்தும் வகையில், தனது தேர்தல் அறிக்கையில் வித்தியாசமான ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
தேர்தல் அறிக்கையில் தொழிற் கல்வி படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்பத்தினர் 25 மரக்கன்று நட்டிருந்தால், அவர்களுக்கு 1 மதிப்பெண் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
 
இது குறித்து பேசிய வைகோ, மரங்களை வளர்த்து பாதுக்காப்பது அரசின் கடமையாகும், பொது மக்களிடம் மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டம், 50 மரக்கன்றுகள் நட்டிருந்தால் 2 மதிப்பெண், 100 மரக்கன்றுகள் நட்டிருந்தால் 3 மதிப்பெண், மரக்கன்றுகள் நட்டதாக பொய்யான தகவல் அளித்தால் 5 மதிப்பெண் குறைக்கப்படும், என்று கூறினார்,
 
மேலும், தமிழகத்தை பசுமையாக மாற்ற மரம் நடுதல் இயக்கத்தை மக்கள் நலக் கூட்டணி அறிவித்து இருப்பதாக வைகோ கூறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments