இரா. சிந்தன் என்ற இளம் கவிஞன் வெளியிட்ட நானாகவே... என்ற புத்தகத்தில் இருந்து
வெள்ளைச் சீமான்களின்
செங்கோலுக்கும்
சிம்மாசனத்திற்கும்
எதிராய்
வெள்ளைத் துண்டையே
கிரீடம் ஆக்கிய கவியரசா
உன் கோபக்கனல்
உன் செவ்விழிச் சுடரிலும்
முறுக்கு மீசையிலும்
தெறித்து விழுகியது
உன் தியாகம்
நெற்றிப் பொட்டில்
சிவப்பாய் தெறிக்கிறது.