முகுந்தா முகுந்தா... கிருஷ்ணா
முகுந்தா முகுந்தா...
சாலை போக்குவரத்து சிக்னலில்
கேட்ட பாடல் இது!
கருநீல வண்ணம் பூசி
கையில் புல்லாங்குழலுடன்
இரண்டு சிறுவர்கள் ஆடிப் பாடினர்!
கிருஷ்ண ஜெயந்தி நினைவிற்கு
வந்த சிறிது நேரத்தில்...
சிக்னல் மாறுவதற்குள்
பாடலை முடித்துக் கொண்டு
சார் சார் என்றனர்...