Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஸ்லீமா ந‌ஸ்‌ரீன் கவிதைகள்

Webdunia
சனி, 8 மார்ச் 2008 (10:53 IST)
webdunia photoWD
ஆங்கிலம ் வழித ் தமிழில ் : சிபிச ் செல்வன ்
நன்ற ி: பன்முகம ் - காலாண்டிதழ ் ஏப்ரல ்- ஜூன ் - 2004

நெருப்பு

அவன் என் கணவன், அகராதி கூறுகிறது. அவன் என்னுடைய தலைவன், பிரபு, குரு, இ‌த்யாதி இத்யாதி
அவன் என்னுடைய கடவுள் என்பதை சமுதாயம் ஒப்புக் கொண்டது.
என்னுடைய நடுங்குகிற கிழக்கணவன் நன்றாகக் கற்று கொண்டான்
ஆதிக்கத்துடன் நடத்தை விதிமுறைகளை செயல்படுத்தும் அதிகாரம் குறித்து.
ஒளி வீசுகிற சொர்கத்தின் எல்லையில், இறவாத தன்மையுடைய பாலத்தின் மீது உலா போவதில் தணியாத ஆசை உடையவன் அவன்.
அவன் எல்லாப் பழவகைகளையும், பளிச்சென்று கிளர்ச்சியூட்டும் வண்ண‌ங்களையும், சுவையான உணவுகளையும் விரும்பினான்.
அவனின் அடங்காத காமத்திற்குப் பின்
அழகு தேவதையின் உடலை மென்று சுவைத்து, சப்பி, உறிஞ்சி நடுங்குகிறான்.
இவை ஒன்றும் என் தலையில் எழுதி வைக்கப்படவில்லை, ஆனால் விதி, இந்த மண்ணில் வாழும் நாட்கள் முழுவதும் எரியும் சூட்டடுப்பில் தள்ளப்பட்ட விறகு போலாக்குகிறது இச்சமூகம்.
இந்த வாழ்விற்குப் பின், நான் பார்க்கிறேன் நடுங்குகிற கிழக்கணவன் எழுபத்தி ஏழு வயதிற்குப் பின்னும் காமத்தில் திளைப்பதை.
நான் மட்டுமே தனியாக இருக்கிறேன், இன்பமான சொர்கத்தின் தோட்டத்தில் நான் மட்டுமே தனிமையில் மனிதனின் நாற்றம் வீசும்குருட்டு ஆபாசத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்,
நான் உள்ளுக்குள் காலங்காலமாக தீரா நரகத்தில் எரிந்து கொண்டிருக்கிறேன்,
ஒரு கற்புள்ள நற்குணமுள்ள பெண் என்பதால்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments