சிவாஜிநகர் மெட்ரோ நிலையத்திற்கு புனித மேரி என பெயர் மாற்றமா? அமைச்சர் விளக்கம்..!

Mahendran
செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (14:32 IST)
பெங்களூருவில் உள்ள சிவாஜிநகர் மெட்ரோ நிலையத்திற்கு 'புனித மேரி'யின் பெயரை வைப்பதற்கான முன்மொழிவு தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு, சிவாஜிநகர் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத் விளக்கமளித்துள்ளார். மெட்ரோ நிலையத்தின் பெயர் மாற்றப்படாது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
 
சமீபத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, வரவிருக்கும் பிங்க் லைன் மெட்ரோ நிலையத்திற்கு புனித மேரியின் பெயரை வைக்க மத்திய அரசுக்கு ஒரு பரிந்துரையை அனுப்ப உள்ளதாக அறிவித்திருந்தார். இந்த முன்மொழிவு, எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை பெற்றது. 
 
இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, எம்.எல்.ஏ. ரிஸ்வான் அர்ஷத், சிவாஜிநகர் மெட்ரோ நிலையத்தின் பெயர் மாற்றப்படாது என்று தெளிவுபடுத்தினார். மாறாக, அந்த பகுதியில் உள்ள இரண்டு மெட்ரோ நிறுத்தங்களை வேறுபடுத்திக் காட்ட, சிவாஜிநகர்-புனித மேரி பசிலிக்கா நிறுத்தம் மற்றும் சிவாஜிநகர்-மூங்கில் பஜார் நிறுத்தம் என்று கூடுதல் அடையாளங்கள் சேர்க்கப்படும் என்று அவர் கூறினார்.
 
சிவாஜிநகர் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்றும், அதன் பெயர் மெட்ரோ நெட்வொர்க் முழுவதும் தக்கவைக்கப்படும் என்றும் ரிஸ்வான் அர்ஷத் வலியுறுத்தினார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments