ஒரே ஒரு மெயில் ஹேக் செய்து ரூ.2.16 கோடி மோசடி.. காவல்துறையின் துரித நடவடிக்கை..!

Siva
திங்கள், 10 நவம்பர் 2025 (17:55 IST)
பெங்களூரை சேர்ந்த குரூப் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனத்துக்கும் இடையிலான மின்னஞ்சல் தொடர்பில் ஊடுருவிய ஹேக்கர்கள், ரூ.2.16 கோடி தொகையை மோசடி செய்த சம்பவம் குறித்து பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
குரூப் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.2.16 கோடி தொகையை திசை திருப்பும் நோக்கத்துடன், ஹேக்கர்கள் அந்த நிறுவன அதிகாரிகளை போல ஆள்மாறாட்டம் செய்து, டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிதி பிரிவுக்கு போலியான வங்கிக்கணக்கு விவரங்களை அனுப்பியுள்ளனர்.
 
இதன் விளைவாக, டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனம் நவம்பர் 4ஆம் தேதி அந்த தொகையை மோசடி வங்கிக்கணக்குக்கு மாற்றியுள்ளது. எனினும், டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனம், சரியான நேரத்தில் மோசடியை கண்டறிந்ததாலும், வங்கியின் துரித நடவடிக்கையாலும் அந்த நிதி உடனடியாக முடக்கப்பட்டது. எனவே, எந்த நிதி இழப்பும் இல்லை" என்று விளக்கம் அளித்துள்ளது.
 
குரூப் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி அளித்த புகாரின் பேரில், இணைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மோசடி வங்கிக் கணக்கு குஜராத் மாநிலம் வதோதராவில் இருப்பது கண்டறியப்பட்டு, அந்த நிதி முடக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஞ்சா போதை.. பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்த மகன்.. தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!

மோடியை அடுத்து அத்வானியையும் புகழ்ந்த சசிதரூர்.. காங்கிரஸ் கட்சி அதிருப்தி..!

அபிநய் மரணம்.. கண்டுகொள்ளாத உறவினர்கள்!.. இறுதி ஏற்பாடுகளை செய்த KPY பாலா...

மகளிர் உரிமைத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்.. பெண்கள் மகிழ்ச்சி..!

ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடிய பள்ளி மாணவர்கள்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments