செப்டம்பர் முதல் மகளிர் உதவித்தொகை ரூ.2100.. அரசின் அதிரடி அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (15:24 IST)
ஹரியானா மாநிலத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2100 நிதி உதவி வழங்கும் "லாடோ லட்சுமி யோஜனா" என்ற திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்துள்ளார். 
 
 தீன் தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளான செப்டம்பர் 25 முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வரும் என்றும்,  23 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைத்துப் பெண்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் முதற்கட்டமாக, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன. எதிர்காலத்தில், வருமான பிரிவுகள் விரிவாக்கப்படும் என்றும், திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் என அனைவருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், ஒரு குடும்பத்தில் எத்தனை பெண்கள் இருந்தாலும், அனைவருக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும். உதாரணமாக, ஒரு குடும்பத்தில் மூன்று பெண்கள் தகுதியுடையவர்களாக இருந்தால், மூவரும் இந்தத் திட்டத்தின் பலனை பெறுவார்கள்.
 
திருமணமாகாத பெண்கள் அல்லது திருமணமான பெண்கள் என்றால் அவர்களின் கணவர் ஆகியோர் கடந்த 15 ஆண்டுகளாக ஹரியானாவில் வசித்திருக்க வேண்டும். இந்தத் திட்டம், ஹரியானா மாநில பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதோடு, பொருளாதாரரீதியாக அவர்களை சுதந்திரமடைய செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments