500 நிறுவனங்கள் நிராகரிப்பு.. மாதம் ரூ.20 லட்சத்தில் வேலை பெற்ற 23 வயது இளைஞர்..!

Siva
வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (18:49 IST)
வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளைஞ 500-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளில் நிராகரிக்கப்பட்ட பிறகு, OpenAI நிறுவனத்தில் சேர்ந்து, மாதம் ₹20 லட்சம் சம்பாதித்து, பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.
 
கணினி அறிவியல் துறையில் பிடெக் பட்டம் பெற்ற தனது குடும்பத்தின் முதல் பட்டதாரி இந்த இளைஞர். ஆரம்பத்தில், ஆண்டுக்கு ₹3.6 லட்சம் சம்பளத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், அந்த வேலைக்கு எட்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். 
 
அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து நிராகரிப்புகள் ஏற்பட்ட நிலையில் ஒரே ஒரு நேர்காணல் அழைப்பு அவருடைய வாழ்க்கையை புரட்டி போட்டது. OpenAI நிறுவனத்தில் அவருக்கு மாதம் ₹20 லட்சம் சம்பளம் கிடைத்தது. இது அவரது முதல் வேலையின் சம்பளத்தை விட மிகப்பெரியது. 
 
"உங்களிடம் திறமையும் நம்பிக்கையும் இருந்தால், நீங்கள் இருக்கும் இடம் தேடி வேலை வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
விடாமுயற்சியும் திறமையும் இருந்தால், சிறிய நகரங்களில் உள்ள மாணவர்களாலும் உலகளாவிய வாய்ப்புகளை பெற முடியும் என்பதை அவரது கதை உணர்த்துகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments