Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி.. பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து..!

Advertiesment
அயோத்தி ராமர் கோவில்

Mahendran

, வியாழன், 13 நவம்பர் 2025 (12:15 IST)
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் ஜென்மபூமி கோவிலில் நவம்பர் 25 ஆம் தேதி மிக முக்கியமான கொடியேற்று விழா நடைபெறவுள்ளது. இந்த கட்டுமான பணிகள் நிறைவை குறிக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
 
ராமர் மற்றும் சீதா தேவியின் திருமண நாளை கொண்டாடும் விவாஹ பஞ்சமி அன்று நடைபெறும் இந்த விழாவில், 190 அடி உயரத்தில் முக்கோண வடிவிலான புனித கொடி ஏற்றப்பட உள்ளது. உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.
 
விழா ஏற்பாடுகளுக்காக, பக்தர்களுக்கான தரிசனம் நவம்பர் 24 ஆம் தேதி மாலை முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் அவர்கள் உறுதிப்படுத்தியபடி, நவம்பர் 26 ஆம் தேதி காலை 7 மணிக்கு மீண்டும் வழக்கம்போல் தரிசனம் தொடங்கும்.
 
இந்த கொடியேற்று விழா, ராமர் கோவிலின் கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு புனித நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு