Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய ஐடி துறையின் அஸ்திவாரத்தையே மாற்றப்போகும் ஒரு எச்சரிக்கை மணி. சுதாரிக்க வேண்டிய காலம்..!

Advertiesment
ஐடி வேலைவாய்ப்பு

Siva

, வியாழன், 5 பிப்ரவரி 2026 (13:16 IST)
இந்தியாவின் ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் பணிகளையே செய்கின்றன. இப்போது, அதே அமெரிக்க நிறுவனங்கள் மனிதர்களைவிட வேகமாகவும், மலிவாகவும் வேலை செய்யக்கூடிய ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன.
 
இதனால், ஆயிரக்கணக்கான பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் அவசியம் இனி நிறுவனங்களுக்கு இருக்காது. ஒரு மென்பொருளை உருவாக்குவது முதல் அதில் உள்ள பிழைகளைத் திருத்துவது வரை அனைத்தையும் ஏஐ தானாகவே செய்யும் போது, மனித உழைப்பிற்கான தேவை குறையும். 
 
ஐடி துறை முற்றிலும் அழிந்துவிடாது, ஆனால் "ஐடி வேலை என்பது பாதுகாப்பான எதிர்காலம்" என்ற கனவு மெல்ல கலைந்து வருகிறது. உணர்ச்சிகளை விட வேகம் மற்றும் செலவுக்கே வணிக உலகம் முக்கியத்துவம் அளிக்கும். எனவே, பழைய திறன்களை நம்பியிருக்காமல் புதிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு நாம் தயாராக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காகங்கள் இறப்பு!.. சென்னையில் பரவும் H5N1 வைரஸ்!. பறவைக் காய்ச்சல் பரவுமா?!..