அமா்நாத் யாத்திரை நிறைவு: இந்த ஆண்டு தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை...!

Mahendran
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (12:41 IST)
அமர்நாத் யாத்திரை நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளன.

இமயமலையில் 3880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் செய்து வருகின்றனர்.

48 கிலோமீட்டர் கொண்ட இந்த வழித்தடத்தில் 14 கிலோ மீட்டர் தொலைவு செங்குத்தான வழித்தடம் என்பதும் இந்த வழித்தடங்களில் தான் பக்தர்கள் ரிஸ்க் எடுத்து பனிலிங்கத்தை தரிசனம் செய்ய சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகை யாத்திரை நேற்று நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் 5.10 லட்சம் பக்தர்கள் குகை கோவிலில் தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது என்பதும், ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறைவடைந்தது என்பதுன் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு: கூட்டணி உறுதியாகிறதா?

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

தனியார்களை நம்பி, அதுவும் 2 நிறுவனங்களை மட்டும் நம்பினால் இப்படித்தான்.. இண்டிகோ விவகாரம் குறித்து எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments