விமானத்தில் நடுவானில் பெண் பயணியை கொட்டிய தேள்!

Webdunia
சனி, 6 மே 2023 (14:55 IST)
மும்பை சென்ற இந்திய விமானத்தில், பெண் பயணி ஒருவரை தேள் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது. .ஏ.ஐ. 630 என்ற எண் கொண்ட அந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் தன் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது தேள் ஒன்று கொட்டியது.

உடனே வலியால் அலறினார் அப்பெண். ஏர் இந்தியா விமான  நிறுவன செய்தித் தொடர்பாளர், விமானம் தரையிறங்கியபின்ம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்னர் வீடு திரும்பினார் என்று கூறினார்.

மேலும், எங்கள் அதிகாரிகள் அவர் மருத்துவமனைக்குச் சென்று வீடு திரும்பும்வரை  அனைத்து உதவிகளையும் செய்தனர் என்று தெரிவித்துள்ளார்.

அந்த விமானத்தில் இருந்த தேளை கண்டுபிடித்து நீக்கிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments