Publish Date: Sun, 01 Feb 2026 (16:56 IST)
Updated Date: Sun, 01 Feb 2026 (16:57 IST)
2026 மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இந்தியப் பங்குச்சந்தையில் எதிர்பாராத அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட்டிற்காக சந்தை இயங்கிய நிலையில், சென்செக்ஸ் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஒரே நாளில் 1,843 புள்ளிகள் வரை சரிந்து பெரும் வீழ்ச்சியை கண்டது. நிஃப்டியும் சுமார் 600 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கடும் சரிவிற்கு முக்கிய காரணமாக, பங்கு வர்த்தகத்தின் மீதான பங்குகள் பரிவர்த்தனை வரி உயர்த்தப்பட்டதே பார்க்கப்படுகிறது. ஊக வணிகத்தை கட்டுப்படுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கொண்ட இந்த வரி உயர்வு, வர்த்தகர்களிடையே கலக்கத்தை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக பொதுத்துறை வங்கிகள் மற்றும் உலோகத்துறை பங்குகள் 6% வரை சரிந்தன. ஐடி துறையை தவிர மற்ற அனைத்துத் துறைகளும் சிவப்பு நிறத்திலேயே வர்த்தகமாகின.
பட்ஜெட் உரையின் போதே தொடங்கிய இந்த சரிவு, வர்த்தக நேர முடிவில் முதலீட்டாளர்களின் பல லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பை துடைத்து எறிந்துள்ளது. வரும் வாரங்களில் சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பதை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
பங்குச்சந்தை, மத்திய பட்ஜெட் 2026, சென்செக்ஸ் சரிவு, நிஃப்டி, வரி உயர்வு, முதலீடு, வணிகச் செய்திகள்