Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிர்ஷ்டவசமாக டெல்லி வீரர்கள் உயிர் தப்பினர்

அதிர்ஷ்டவசமாக டெல்லி வீரர்கள் உயிர் தப்பினர்
, சனி, 9 மே 2015 (10:47 IST)
ராய்ப்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் சர்ச்சையால் டெல்லி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பியுள்ளனர்.
 

 
8 ஆவது ஐபிஎல் போட்டிகள் இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பங்குபெற டெல்லி வீரர்கள் ராய்ப்பூருக்கு பயணம் மேற்கொண்டனர். இதற்காக டெல்லி வீரர்கள் அனைவரும் நேற்று ராய்ப்பூருக்கு விமானம் மூலம் பயணித்தனர்.
 
இந்நிலையில் விமானம் தரைஇறங்கிய போது, அதே ஓடுதளத்தில் மேலும் ஒரு விமானம் இருந்ததால் திடீரென சர்ச்சை எழுந்தது. எனினும் சாமார்த்தியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை பாதுகாப்பாக தரை இறக்கினார். இதனால் டெல்லி வீரர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Share this Story:

Follow Webdunia tamil