காதுகள் வெறும் ஒலி கேட்பதற்காக மட்டுமல்ல; அவை நமது உடல் சமநிலையை நிலைநிறுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. இரண்டு கால்களில் நாம் மயங்கி சரிந்து விடாமல் உறுதியாக நிற்க காரணம் நம் காதுகள்தான்.
இந்த சமநிலைக்கு அடிப்படையாக இருப்பது, காதுக்குள் இருக்கும் "காக்லியா" என்ற திரவமே ஆகும்.
காக்லியாவின் பணிகள்:
இந்தத் திரவம்தான் மொத்த உடல் அமைப்பையும் சமநிலையில் நிறுத்தி, இரு கால்களால் நிற்க உதவுகிறது.
ஒலியலைகளை காது உள்வாங்கி, காக்லியாவை அதிர்வடையச் செய்து, அலைகளை மூளைக்கு அனுப்பி ஒலியை உணர வைக்கிறது.
சாதாரணமாக 10 முதல் 15 டெசிபல் ஒலியை கேட்கும் திறன் போதுமானது. இந்த அளவை தாண்டி அதிக சத்தம் கேட்கும்போது காதில் பிரச்சனைகள் எழுகின்றன. இதன் விளைவாக, ஆரம்பத்தில் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, தலைவலி போன்றவை ஏற்பட்டு, இறுதியில் காது கேட்கும் திறன் குறையும் ஆபத்தும் உள்ளது.