Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயிற்சியாளர்களிடம் இருந்து அறிவுரைப் பெறாத ஒரே கேப்டன் தோனிதான்… ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

Advertiesment
தோனி

vinoth

, ஞாயிறு, 7 செப்டம்பர் 2025 (14:17 IST)
இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை எழுதினால் அதில் தோனிக்கு தனியிடம் ஒதுக்கப்படும்.

தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விவசாயம், பைக் சவாரி என மத்திய வயது வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் தன்னுடைய 43 ஆவது வயதிலும் ஆடிவரும் தோனி, இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து ஆடுவார் என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது. கடந்த சீசனில் ருத்துராஜ் பாதியிலேயே காயம் காரணமாக விலக, கேப்டன் பொறுப்பேற்று அணியை வழிநடத்தினார் தோனி.

இந்நிலையில் தோனி பற்றி பேசியுள்ள ஆஸி முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் “ஐபிஎல் தொடரில் பயிற்சியாளர்களிடம் இருந்து அறிவுரைப் பெறாத ஒரே கேப்டன் தோனிதான். சிஎஸ்கே அணியில் தோனியின் பேச்சைதான் பயிற்சியாளர் கேட்பார்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரிக்கெட் போட்டி நடந்தபோது மைதானத்தில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி, பலர் படுகாயம்