Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2018 ம் ஆண்டுகான வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு...

2018 ம் ஆண்டுகான வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு...
, புதன், 3 அக்டோபர் 2018 (15:39 IST)
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் நோபல் கமிட்டி சார்பில் வேதியியலுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித குலத்துக்கு உதவும் வகையில் புதிய வேதியியல் பொருட்களை கண்டுபிடித்ததற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சுற்றுச் சூழலுக்கு உகந்த  வேதியியல் பொருள்களை கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசுக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது .
 
நோபல் பரிசு பெறும் மூன்று பேரில் பிரான்சஸ் அர்னால்ட் என்ற பெண் நிபுணரும் ஒருவர்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு அதாவது மேரி குயூரி என்ற பெண் விஞ்ஞானிக்கு பிறகு வேதியியலுக்கான நோபல் பரிசை இவர் பெறுகிறார். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகும் .
 
மூன்று பேர்களின் விவரம்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்சஸ் ஹெச். அர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித், பிரிட்டனின் சர் கிரிகோரி விண்ட்டர் ஆகியோர்  இவ்விருது பெறுகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியர்கள் நாளை வேலை நிறுத்தம் –பள்ளிகள் இயங்குமா?