Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குளியல் அறையில் கேமரா..: தேடித் தேடி வேட்டையாடப்படும் பெண்கள்

குளியல் அறையில் கேமரா..: தேடித் தேடி வேட்டையாடப்படும் பெண்கள்
, புதன், 28 நவம்பர் 2018 (17:03 IST)
சீனாவில் குறிப்பிட்ட இஸ்லாமிய இனத்தை சேர்ந்த பெண்களை தேடி அடைத்து வைத்து சித்திரவதை செய்த சம்பவம் அங்கிருந்து தப்பித்து வந்த ஒரு பெண்ணால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
 
குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிந்தாலோ, அடையாள அட்டையை பாதுகாக்க தவறினாலோ கடுமையாக தண்டிக்கப்படுவார்களாம். 
 
ஒரே தளத்தில் சுமார் 230 பெண்களை அடைத்து வைத்து, பல நாட்கல் தூங்கவிடாமல் சித்திரவதை செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் மொட்டை அடித்து நிர்வாணப்படுத்தி பல மணி நேரம் அறையில் அமரவைப்பார்களாம். 
 
சில சமயங்களில் இரும்பு நாற்காலியில் அமரவைத்து மின்சாரம் பாய்ச்சுவது, கழிவறை மட்டுமின்றி குளியல் அறையிலும் கேமிராக்கள் பொறுத்தப்பட்டிருக்குமாம். இதனால் பல நாட்கள் குளிக்காமலும், கழிவறைக்கு செல்லாமலும் இருந்து உள்ளதாகவும் அந்த தப்பித்து வந்த பெண் தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று இதுபோன்று சுமார் 2 மில்லியனுக்கு மேற்பட்ட பெண்களை சீனா சித்திரவதைக்கு உட்படுத்துவதாக தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்த மன்னிப்பு: கெத்து காட்டிய முருகதாஸ்