Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜநாகத்தை சீண்டிய வாலிபர்: கடைசியில் நேர்ந்த விபரீதம்

ராஜநாகத்தை சீண்டிய வாலிபர்: கடைசியில் நேர்ந்த விபரீதம்
, செவ்வாய், 18 டிசம்பர் 2018 (12:58 IST)
தாய்லாந்தில் ராஜநாகத்தை வைத்து வித்தை காட்டிய வாலிபரை அந்த பாம்பு கடித்ததில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதிலும் உலகின் மிகக்கொடிய விஷம் கொண்ட பாம்பு என்றால் அது ராஜநாகம் தான். அதன் நீளம், அதன் தோற்றம் பார்ப்பவர்களை கதிகலங்க வைக்கும்.
 
இந்நிலையில் தாய்லாந்தில் வாலிபர் ஒருவர் ராஜநாகத்தை கையில் வைத்து வித்தை காட்டிக் கொண்டிருந்தார். ஆபத்தை உணராத அவர் பெருமையோடு அந்த பாம்பிடம் விளையாடிக்கொண்டிருந்தார்.
 
ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமடைந்த பாம்பு, அவரது கையில் கடித்து விட்டது. உடனடியாக அந்த பாம்பை அவர் கீழே வீசினார்.
 
இதனையடுத்து அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தை உணராமல் வெட்டி விளம்பரத்திற்காகவும், த்ரில்லுக்காகவும், பந்தாவிற்காகவும் அந்த இளைஞர் செய்த செயல் அவரது உயிருக்கே உலை வைத்துவிட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திராவில் மீன்மழை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!!!