Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆப்பிரிக்காவின் கூரை எத்தியோப்பியாவில் நிலச்சரிவு: 12 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்காவின் கூரை எத்தியோப்பியாவில் நிலச்சரிவு: 12 பேர் உயிரிழப்பு
, புதன், 5 செப்டம்பர் 2018 (15:21 IST)
எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர்.

 
ஆப்பிரிக்காவின் கூரை என்று அழைக்கப்படும் எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
 
டாவ்ரோ பிராந்தியத்தில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்ததுடன் அதன் இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
 
எத்தியோப்பியா தலைநகரில் கடந்த ஆண்டு மழை பெய்தபோது குப்பைமேடு சரிந்து 115 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

65 லட்சம் வரதட்சணை: மனைவியை நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டிய கணவன்