Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நேரத்தில் கொல்லப்படும் 10 ஆயிரம் நாய்கள்

ஒரே நேரத்தில் கொல்லப்படும் 10 ஆயிரம் நாய்கள்
, திங்கள், 18 ஜூன் 2018 (07:21 IST)
சீனாவில் தொடங்கவிருக்கும் நாய்கறி திருவிழாவில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட நாய்களை பலியிட்டு கொண்டாட சீனர்கள் திட்டமிடப்பட்டுள்ளனர்.
சீனாவில் வரும் 21-ந் தேதி யூலின் நகரில் நாய்கறி திருவிழா நடைபெற உள்ளது. வருடா வருடம் கொண்டாடப்படும் இத்திருவிழாவிற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் இத்திருவிழாவில் ஏராளமான நாய்கள் கொல்லப்படும்.
 
இந்த திருவிழாவில் சுமார் 10000 நாய்கள் இறைச்சிக்காக வெட்டப்பட்டும். அத்தோடு இல்லாமல் சில நாய்கள் உயிருடன் தீயில் வாட்டப்படும். சீனர்களை பொறுத்தவரை நாய் இறைச்சி உடலுக்கு குளிச்சி தரும் என நம்புகின்றனர்.
 
விலங்குகள் நல ஆர்வலர்கள் இத்திருவிழாவிற்கு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இத்திருவிழா சீனாவில் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுற்றுலா செல்வோருக்கு கடும் கட்டுப்பாடுகள்; மத்திய அரசு அதிரடி