Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறங்கி வந்தார் வடிவேலு! மீண்டும் உருவாகிறது ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’

இறங்கி வந்தார் வடிவேலு! மீண்டும் உருவாகிறது ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’
, வெள்ளி, 23 நவம்பர் 2018 (10:43 IST)
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேல் ஹீரோவாக நடித்து 2006-ல் வெளியான படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. இந்தப் படம்  அந்த ஆண்டில் மிகப்பெரிய ஹிட்டானது.
 
இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற படத்தை தயாரிக்க ஷங்கர் முடிவு செய்தார். இந்தப் படத்தையும் சிம்புதேவன் இயக்கவிருந்தார். நடிகர் வடிவேலுவே ஹீரோவாக நடிக்க இருந்தார்.
 
இதற்காக சென்னையில் பெரிய செட்டுகள் அமைத்தார்கள். துணை நடிகர், நடிகைகள் ஏராளமானோரை ஒப்பந்தம் செய்தார்கள்
 
ஆனால் திடீரென வடிவேலு படப்பிடிப்புக்கு வராமல் தவிர்த்தார். இதனால் தயாரிப்பு தரப்பில் இருந்து வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் வடிவேலு படப்பிடிப்புக்கு வர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
 
இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் கொடுத்தார்.
 
தற்போது நடிகர் வடிவேலு தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
 
நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன இந்தப் படம் அடுத்த தீபாவளிக்கு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிரிக்க வைக்க வருகிறார் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' - புதிய போஸ்டர் வெளியீடு